Wednesday, December 3, 2014

ஆமைகளின் கடல் வழியில் கடலோடும் தமிழரின் கடல் மேலாண்மை!!



தமிழர்களின் தொன்மையை பற்றி ஆய்வு செய்து வரும் என்னை வியக்க வைப்பது உலக நாடுகளில் உள்ள தொன்னூருக்கும் மேற்பட்ட மொழிகளில் திராவிட என்று சொல்லபட்ட தமிழ் மொழியின் கூறுகள் அதன் பண்பாடுகள் நிறையவே இருப்பதும் இந்தோ ஐரோப்பிய கடற்கரை மொழிகள் அனைத்திலும் தமிழ் மொழியின் கூறுகள் அதன் பண்பாடுகளின் தாக்கங்கள் பிணைந்து நிற்பதும்

உலகம் முழுவதும் உள்ள அணைத்து கண்டங்களிலும் தமிழ் பரவல் இருப்பதும் அதை ஒப்பிட்டிவியல் மொழி வழியாக அனைவரும் பேசி வரும் இக் காலத்தில்

அதற்கான தமிழியல் தரவுகளை கடலியல் மூலமாக தொடர்ந்து ஆய்வு செய்து வரும் நான்

ஒரிசாவில் இருபது வருடம் வாழ்ந்து தமிழ் சங்க பணிகள் செய்து
அங்கு உள்ள உள்ள தமிழர்களை ஒன்று சேர்த்து அவர்களை வெளி உலகிற்கு அறிமுகம் செய்து ,கலிங்க ஈழ தமிழ் உறவுகளை பற்றி ஆய்வு செய்து அதன் பின்னால் குமரி கடல் ஆய்வுகள் செய்து உலகின் மேற்கு பகுதிகளையும் ,கிழக்கு பகுதிகளையும் கடல் மூலமாக இணைத்தவர்கள் அகண்ட தென் தமிழக கடலோடிகள் என்று நிருபிக்கும் நேரத்தில்
கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம்.

ஒரிசாவில் இருபது வருடம் வாழ்ந்தவன் நான்

லெமுரிய ,குமரிக்கண்டம்,கடல் கொண்ட தென்னாடு என்று மூழ்கிய நிலங்களை ,கடலில் இருக்கும் நமது பண்டைய துறைமுகங்களை பற்றி பல வருடங்களாய் ஆய்வு செய்து வரும் எனக்கு என் ஆய்வுகளில் ஒரு பகுதியான இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு வியப்பான நிகழ்வு தெரிய வந்தது

உலகில் கடல் ஆமைகள் பல கோடி வருடங்களாய் வாழ்ந்து வருகின்றது
மனிதர்களின் காலமோ நான்காம் பனி காலத்திற்கு பிந்தைய சில இலக்க வருடங்கள் தான்

உலகத்தில் முந்நூறு வகையான ஆமைகள் இருந்தாலும் இன்று ஆய்வாளர்கள் ஆமைகளை எழு வகையாக பிரித்து வைத்து இருகிறார்கள்
கால்கள் இருந்தால் அதற்க்கு tortoise எனவும் ,இறக்கைகள் இருந்தால் அதற்க்கு marine turtles என்று பெயரும் வைத்து உள்ளார்கள்
நமது கடலில் பங்குனி ஆமை ,அழுந்காமை,பச்சை ஆமை,கிளிமூக்கு ஆமை, தோணி ஆமை என்ற ஐந்து வகை ஆமைகள் வருகின்றன ,
அருமையான தட்ப வெப்ப சூழல் இருப்பதால் இனபெருக்கம் செய்ய கல் புற்களும் அதற்க்கு தேவையான ஜெல்லி இன மீன்களும் கிடைபதால்
சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85கி.மி தூரமே நீந்தி கடக்க முடியும் ஆனால் இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் கிலோமீட்டர்கள் இந்தோ பசிபிக் கடல் நீரோட்டங்களில்
அதுவும் குறுகிய காலத்தில்!! எவ்வாறு என்று சில புதிய தொழில் நுட்பங்களின்(RFID-செயற்கைக்கோள் சாதனம்)RFIDஉதவியுடன் ஆராய்ந்த போது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு பயணிக்கும் நிகழ்வுகள் தெரிய வந்தது

ஒரிசாவில் வாழ்ந்ததால் பல வருடங்கள் கஹிர்மாதா தேவி பட்டினம் ,ருஷிகல்யா போன்ற பகுதிகளில் வரும் ஆமைகளை காண பல முறை சென்று இருக்கிறேன் ,அதன் அருகில் தான் தென்கிழக்கு ஆசியாவுடன் தொடர்பு கொண்ட பாலூர்,தேவிபட்டினம்,தாமர போன்ற பண்டைய துறைமுகங்களும் இருந்தன ,தான் முட்டை இடும் இடத்தை தேடி வரும் ஆமைகள் , ஆமைகளின் குட்டிகள் கூட தான் பிறந்த இடத்தை தேடி மீண்டும் இனபெருக்கம் செய்ய வருவது ஆமைகளின் சிறப்பு

. இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயர்கைகோளின் மூலம் பின்தொடர்ந்த போது மியான்மர்(பர்மா), மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட், ஆப்ரிக்கா என பல உலக நாடுகளின் கடற்கரைகளுக்கு ஆராய்ச்சியாளர்களை இட்டு சென்றுள்ளன.

அப்படி அவை கடந்த கடற்கரைகளை பன்முக பறவையில் ஆராய்ந்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்த்து.

ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் இன்று உள்ள துறைமுகங்களும் அவற்றில் 1300 இடங்களின் பெயர்களும், அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருந்திருக்கிறது. அந்த கடற்கரைகளில் உள்ள ஊர்கள் சிலவற்றின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு:

ஊர் பெயர்களும் அந்த நாடுகளும்:

மியான்மர் -தமிழா காஞ்சி -

மலேசியா- சபா சந்தோகன்
ஆஸ்திரேலியா- கூலன்,மண்ணின் கிரீட தமிழி கிரீக் , சோழவன், ஊரு,

நியூசீலாந்து - வான்கரை, ஓட்டன்கரை, குமரா-

ஸ்பெயின்- மலகா கடலன் ,கடலோட்டி ,படகோட்டி ,படகோனிய

ஜப்பான் - நாரை,மருதை,செண்டை ,

பப்புவா நியூ குனியா - நான்மாடல், குமரி,பொன் பீ ,குறள்

மெக்சிகோ -திகள் ,சோழா, சேதுமால் ,சோழ ,தமிழி பாஸ்
ஐஸ்லாந்து- திங் வெளிர்-

இந்தோனேசியா - தென்கரை ,களிமாந்தன் ,மதுரை
ஆப்ரிக்கா -சன்சிபார் ,நாகமணி கோமுட்டி

துருக்கி -கடல் யோக,அதியமான் ,களமர் ,கலமர்

ஈரான் - கலமர், களமர் பழனி

பெரு - கலவோ ,பள்ளர்,மல்லர் சிலகா ,காஞ்சி

இப்படி அந்த ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் அந்த பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினத்தினரின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்புள்ளதாக இன்றளவும் இருக்கின்றன.
இன்னொரு சுவாரஸ்யிமான விஷயம். ‘சர்க்கரை வள்ளிக்கிழங்கு’(sweet potato) என்பது தமிழ் நாட்டில் விளையும் கிழங்கு வகை.
நம் மீனவர்கள் கடலோடும்போது பல நாள் பசி தாங்க இவற்றையே உணவாக கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இதே வழக்கத்தை தமிழுடன் தொடர்புடையதாக கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மியானமர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் சில பகுதி என பல இடங்களில் நம் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பெயர் ‘குமரா’!!
அதே போல்
பள்ளர் பீன்ஸ் என்று வழங்கப்படும் மொசைகொட்டையும் கடல் பயணத்தில் உணவிற்கு உதவும்
பிசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமக்கள் உபயோகப்படுத்தும் படகின் பெயர் ‘திரி மரம்’. அதில் உள்ள நடு பாகத்தின் பெயர் ‘அம்மா’ வலது பாகம் ‘அக்கா’ இடது பாகம் ‘வக்கா’. அடி பாகம் ‘கீழ்’.பாய் மாற துணியின் பெயர் வடம்
நியுசிலாந்து பகுதியில் 1836ஆம் வருடம் ஒரு தமொவோ என்ற பழங்குடியினர் குடியிருப்பில் வாங்கரி என்ற இடத்தில தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட வெண்கல மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உலகின் பல கடற்கரைகளில் தமிழ் பெயர் உள்ளது
இப்படி கடல் சார் பயண தமிழுடன் தொடர்புடைய பல விஷயங்களை மேலும் பல வருடங்கள் ஆராய்ந்த போது
பழந்தமிழர்கள் தம்முடைய கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமைகளை வழிகாட்டிகளாக (Navigators) பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் உள்ள தரவுகள் வந்த படியே உள்ளது
உலகின் பல துறைமுகங்கள் ஆமைகள் இனபெருக்கம் செய்யும் ஆற்றங்கரை பகுதிகளில் தான் அமைந்து உள்ளது
உலகின் வெப்பத்தை நாம் உணரமால் இருக்க வைக்கும் கடலின் மிக பெரிய மற்றும் சிறிய நீரோட்டங்களை தனது வழி தடமாய் வைத்து இருக்கும் ஆமைகளின் திறனை உணர்ந்த நமது கடலோடிகள் அந்த வழிகளை பாய் மரம் இல்லாத முகவை, மிதப்பு தெப்ப காலத்திலே கண்டுபிடித்து ,
பின்னர் தனது அறிவு சார் திறமையால் பருத்தியால் வெய்த பாய் மர துணியை பயன்படுத்தி பாய் மர கப்பல்களை இயக்கியதால் தான் உலக நாடுகளில் பல்லா என்ற பாய் மர துணி புழக்கத்தில் வந்து நம் பாய் மர துணியை மத்திய திரை கடல் பகுதியினர் பருத்தியின் பெருமையை உணர்ந்து தமிழகம் வர தொடங்கினர்
இன்றும் பாய் மாற துணிகளை பருத்தியால் செய்த மாதரியார் வாதிரியார் என்ற நெசவு சமுகம் நம் தென் தமிழக பாண்டிய நாட்டில் உள்ளது
இப்பொழுது நன்கு ஆராய்ந்து பார்த்தால் உலகின் முதல் கடலோடிகள் என்ற பெருமையை தமிழ் மொழியை பேசும் கடல் சூழந்த நம் நில மக்கள் தான் பெறுகிறார்கள்
இன்றும் உலகில் கடல் சார் மேலாண்மையின் சிறப்பை
மேலை நாட்டையும் கீழை நாட்டையும் அந்த காலத்திலேயே அறிந்து இருந்த நம் தமிழ் மக்கள் தமக்குள் தக்க வைத்து உள்ளார்கள்
ஆமைகள் என்று என்று சொன்னாலே
தமிழர்களின் நினைவிற்கு உடன் வருவது
"ஆமைகள் புகுந்த வீடும் அமீனா புகந்த வீடும் உருபடாது '
என்ற வழக்கு சொற்கள் தான்
கடல் கடந்த ஆமைகளை பின் தொடர்ந்த கடலோடும் மீனவ தமிழர்கள தன வீட்டை விட்டு கடலில் தொலை தூர நிலத்திற்கு சென்றதால் அந்த பெண்களின் சாபத்திற்கு ஆமைகள் உள்ளானதும்
கடல் விரும்பாத பனி நில மக்கள் கடலுக்கு செல்ல கூடாது என்ற சட்டம் போட்டதால் அதன் தொடர்ச்சியாக ஆமைகள் வெறுக்கும் நிலையை உருவாக்கி இருக்கலாம்
அல்லது சனி கிரகம் என்ற பெயர்க்கு மெதுவாக செல்வது என்ற வட மொழி பொருள் இருந்ததால் ,நம் வழக்கில் சனிக்கிரகத்திற்கு ஆமை என்ற பெயர ஏற்கனவே இருந்ததால் சனி புகுந்த வீடு உருபடாது என்ற பொருளுக்கு ஆமைகள் புகுந்த வீடு உருபடாது என்றும் வந்து இருக்கலாம்
ஆனால் தமிழர்களின் வாழ்வில் ஆமைகள் பல வடிவில் உள்ளது , சில பெண்களின் கழுத்தில் ஆமை தாலியாகவும் , நேர்த்திக்கு வேண்டும் போது ஆமைகள் வடிவத்தையும் ,பல கோயில்களில் ஆமைகள் சிற்பத்தையும் ,வைணவ மக்கள் கூர்மம் என வணங்குவதையும் ,மீனவர்கள் ஆல்லேய்லோ ஆமை எல்லாம் , குட்டி ஆண்டவர் என வணங்குவதையும் என் ஆய்வில் உலக நாடு கடற்கரை மக்கள் ஆமைகள் என்றால் செல்வம் என்று சொல்வது போல் நாமும் ஆமைகளை இனி மதிக்கலாம்

நமது சென்னை திருவான்மியூரில் இருந்து அடையாறு என்கின்ற கழிமுக பகுதிகளின் பழைய பெயரே ஆமையூர் என்று ஆம்பூர் நடுகல்லில்
"படுவூர் கோட்டத்து மேல் அடையாறு நாட்டு ஆமையூர் "
என்பதையும் கூட நாம் நினைவில் கொள்ளலாம்
அகண்டதமிழகத்தின் கடற்கரை முழவதும் ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் ஆமைகளின் தாக்கங்கள் இருந்ததை நாம் நன்கு உணர முடியும்
ஆமைகள் வழியை தொடர்ந்து , நமது பாண்டியர் , தொல் பழங் குடிகளின் வரலாற்று ஆய்வையும் ஒருங்கிணைத்து செய்தால் தமிழர்கள் உலகில் எங்கு எங்கு சென்றார்கள் என்பது பற்றி நமக்கு மேலும் தெரிய வரும்
இன்று உலகில் முதல் மனிதர்கள் வாழ்ந்து இருக்ககூடும் என்று சொல்ல கூடிய முதல் ஆறு இடங்களில் மெட்ராஸ் கற்கால தொழிற்சாலை என்று வழங்கப்பட்ட வட தமிழகமும் வருகின்றது

எந்த ஒரு அரசு உதவியுமில்லாமல் சில நண்பர்களின் துணைகொண்டு மட்டுமே இத்தனை ஆண்டுகள் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த நான் இப்போது தான்

INTEGRATED "OCEAN CULTURE" RESEARCH FOUNDATION

ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாடு நிறுவனம் ஒரு கடல் சார் நிறுவனம் ஒன்றை நிறுவி ஆராய்ச்சியை தொடர்ந்து வருகிறேன்

இதன் மூலம் தமது தமிழகம் இந்திய உலக கடற்கரைகளின் கடல் சார் வரலாறு பற்றி நாம் நன்கு அறியலாம் ,

நமது கடல் மேலாண்மையை பற்றி நாம் உலகறிய வைக்கலாம்

இந்த ஆய்வின் மூலம் மூலம் கடல் சார் அறிவு புவி சுழற்சி ,கப்பல்துறை முக ,கடல் வளம், கடல் சுற்று சூழல், பருவ காற்றுகள் பற்றிய ஆய்வுகள் , ,மீனவர்கள், மற்றும் பல துறைனரிடம் ஒருங்கிணைந்து பணிகள் செய்யலாம்

No comments:

Post a Comment