Saturday, March 15, 2014

சங்கே முழங்கு - Sange muzhangu

Leader Prabhakaran about MGR1

ராஜ ராஜ சோழன், Raja Raja Cholan - The Greatest Tamil King who ruled India.

Kumari kandam குமரிக்கண்டம் தமிழ்க்கண்டம்

ஆங்கில மொழியின் தோற்றம்

இந்தோனேசியாவில் வாழும் நம் தமிழ் உறவுகள்

தமிழரின் வர்மக்கலை - Tamil's Martial Art

மதுரையின் பெருமை - BBC

தொல்காப்பியர் - உயிரின் வளர்ச்சி

மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு

தமிழ் ஈழம் ஆவணப்படம் - Tamil Eelam Documentary

உன் மதமா என் மதமா.....

சங்கம் தோன்றக் காரணங்கள்
நான்காம் தமிழ்ச்சங்கம் கி.பி. 1901 முதல்
பிலவ ஆண்டு ஆவணித் திங்கள் 13-ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை சித்திரை மீன் கூடிய நன்னாளில் 14. 09.1901 பகல் 1.30 மணிக்கு மேல் 2.45 மணிக்குள் மதுரை சேதுபதி உயர்பள்ளி மண்டபத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம் வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவர் அவர்களால் நிறுவப்பட்டது. அதே நன்னாளில் 1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை, 2. பாண்டியன் புத்தகசாலை 3. நூலாராய்ச்சி சாலை என்பனவும் தொடங்கப்பெற்றன.
சங்கம் தோன்றக் காரணங்கள்
முதல், இடை, கடையென்னும் முச்சங்கங்களும் அழவுற்று சிதைந்தன. கடைச்சங்க பாண்டி மன்னன் உக்கிர பெருவழுதிக்குப் பின் கி.பி. 250ல் கடைச்சங்கம் முழுமையாய்ச் செயல்இழந்து விட்டது. பண்டைய நாளில் தமிழ் மொழிகும், தமிழ்ச் சங்கத்திற்கும் இருந்து வந்த ஏற்றத்தையும், பின்நாளில் தமிழுக்கு ஏற்பட்ட தாழ்வையும் எண்ணி வருந்திய பாண்டியத்துரைத் தேவர், மீண்டும் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் நிலை ஏற்றம் பெற்று, பண்டைய நிலைக்கு உயர வேண்டும் என்னும் பேரார்வப்பெருக்கால் சுமார் 1651 ஆண்டுகளுக்குப்பின் 1901 ஆம் ஆண்டில் மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தனர்.
சங்க நோக்கங்கள்
1. நான்காம் தமிழ்ச்சங்கம் பொழுது போக்குக்காகவோ, பொருள் ஈட்டுவதற்காகவோ, அரசியல் செல்வாக்குப் பெறுதற்காகவோ அமைக்கப்பட்ட அமைப்பு அல்ல.
2. அரசின் பொருட்கொடையையோ, பல்கலைக் கழகங்களின் நல்குதலையோ எதிர்பார்த்து தொடங்கப்பட்டதும் அல்ல.
3. தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், முச்சங்கம் கண்டு முன்பு தமிழ் மொழி பெற்றிருந்த உச்ச நிலைக்கு மீண்டும் உயர்த்த வேண்டும் என்ற நன்னோக்கோடும் உருவாக்கப்பட்ட சங்கமே நான்காம் தமிழ்ச்சங்கம்
தொடக்க நாளிலே உருவாக்கப்பட்ட சங்கத் தீர்மானங்கள்
நான்காம் தமிழ்ச்சங்கத் தொடங்க விழாவிற்கு மன்னர் பாசுகர சேதுபதியவர்கள் தம் பரிவாரங்கள் புடைசூழ வந்திருந்தார். சேதுநாட்டு அவைப்புலவர்களும் பாண்டித்துரை தேவர் தம் அவைப் புலவர்களும் குழுமினர். பெரும்புலவர்களாகிய உ.வே. சாமிநாதைய், சடகோப ராமாநுசாச்சாரியார், ராகவ ஐயங்கார், பரிதிமாற் கலைஞர், சண்முகம்பிள்ளை விழாவிற்கு வந்திருந்தனர். மதுரை மாநகரமே விழாக்கோலம் கண்டது. சங்கத் தொடக்க நாளிலேயே கீழ்க்காணும் “9 தீர்மானங்கள்” நிறைவேற்றப்பட்டன.
1. தமிழ்க் கல்லூரி உண்டாக்குதல்.
2. தமிழ் ஏடுகளை அச்சிட்டு பயன்படுமாறு தொகுப்பது.
3. வெளிவராத அரியநூல்களை அச்சிட்டுப் பரப்புதல்.
4. வடமொழி ஆங்கில நூலைகளை தமிழில் மொழி பெயர்த்தல்
5. தமிழ்க் கல்வி பற்றிய செந்தமிழ் இதழ் வெளியிடுதல்.
6. தமிழில் தேர்வு நடத்தி பட்டமும் பரிசும் வழங்குதல்.
7. தமிழ் அறிஞர்களைக் கொண்டு பேருரையாற்றச் செய்தல்.
8. தமிழில் திறமிக்க பெருமக்களை ஒன்று கூட்டி தமிழாராய்தல்.
9. வேண்டத்தக்க புது நூல்களும் புத்துரைகளும் படைத்து அவற்றை அரங்கேற்றுதல்
இந்த ஒன்பது நோக்கங்களை நிறைவேற்றத்தக்க ஏழு அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கின.
1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை.
2. பாண்டியன் புத்தக சாலை.
3. நூலாராய்ச்சி சாலை.
4. கல்விக் கழகம்.
5. தமிழ்ச் சங்க முத்திராசாலை (அச்சகம்)
6. செந்தமிழ் என்னும் திங்களிதழ்
7. தமிழ்த் தேர்வு என்பவைகளாம்.
சேது சகோதரர்களின் கொடைகள்
ஒன்றுவிட்ட உடன் பிறப்புக்களான மன்னர் பாண்டித்துரையாரும் மன்னர் பாசுகர சேதுபதியவர்களும் இளம்வயிதலேயே தந்தையர்களை இழந்தபோதிலும் மனம் தளராமல் தமிழ்த் தொண்டாற்றத் துணிந்தனர். இன்று நான் காணும் சேதுபதி மேல்நிலைப்பள்ளி, செந்தமிழ்க் கல்லூரி, நான்காம் தமிழ்ச் சங்கம் போன்ற அனைத்துமே அவர்கள் தந்தருளிய கொடைகளே. வேந்தர் பாசுகரசேதுபதி சங்கத் தொடக்க நாளிலே 10000 வெண்பொன் வழங்கி வாழ்த்தினர். பாண்டித்துரைத் தேவர் தாம் குடியிருந்த மாளிகையையே சங்கத்திற்குத் தியாகம் செய்த்ததோடு மட்டுமல்லாமல் சங்கம் என்ற குழந்தை எந்தவிதக் குறையின்றி வளரத் தேவைபடும் அனைத்து வசதிகளையும் தம் சொந்தச் செலவிலேயே பராமரித்தார். சங்கம் என்றுமே சுயமாக தங்குதடையின்றி நடைபெறுவதற்கு தக்க வகையில் சில நிலையான அறக்கட்டளை பாண்டிய மன்னர் பாசுகர் சேதுபதியவர்கள், கடைச் சங்க பாண்டிய மன்னம் உக்கிரப் பெருவழுதி காலத்தில் கி.பி. 250ல் மறைந்த தமிழ்ச் சங்கம், 1901இல் பொன்பாண்டித்துரைத் தேவரால் மீண்டும் நான்காம் தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் உயிர்பெற்று எழுந்தது. நான்காம் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி, உயிர்கொடுத்து, உடல் வளர்த்து, கல்லூரி கண்டு, செந்தமிழ் என்னும் திங்களிதழ் பெற்று, தமிழ்மனம் வீச வீரநடை போடுகிறதென்றால் அது சேது சகோரதர்கள் வழங்கிய கொடைகளே.
இன்றும் நான்காம் தமிழ்ச் சங்கம்
அன்று, அதாவது 1910 இல், எவ்வளவு சிறப்பாக இந்த நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டதோ அதே சிறப்புடன் அதே நோக்கங்களை நிறைவேற்றி, வளர்ச்சிப் பாதை நோக்கி முன்னேறிச் செல்கிறது. இன்று சங்கம் தொடங்கப்பட்ட அன்றே நிறைவேற்றப்பட்ட முதல் அய்ந்தாம் தீர்மானங்கள் உடனே நிறைவேற்றப்பட்டு, செந்தமிழ்க் கல்லூரியாகவும், செந்தமிழ் திங்களிதழாகவும் மலர்ந்து தமிழ்த் தொண்டாற்றி வருகின்றன. பல தமிழ் அறிஞர்களையும், தமிழ் முனைவர்களையும், தமிழ் இலக்கிய மேதைகளையும் உருவாக்கி மகிழ்கிறது நான்காம் தமிழ்ச் சங்கம்.
தமிழ்ச் சங்க நிர்வாகங்களை, தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு கண்காணித்து வருகிறது. ஆட்சிக் குழுவின் தலைவராக – முகவை மன்னர் மாட்சிமை தாங்கிய திரு, இராசா நா .குமரன் சேதுபதியவர்களும், துணைத் தலைவராக திருமதி. இராணி இலட்சுமி நாச்சியார் அவர்களும் மாண்புமிகு அய்யா திரு. இரா. அழகுமலை அவர்கள் செயலாளராகவும் மற்றும் ஒன்பது ஆட்சிக்குழு உறுப்பினர்களும் ஆட்சிக் குழுவில் பங்கேற்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
செந்தமிழ்க் கல்லூரியின் நிர்வாகங்களை கல்லூரிக் குழு கண்காணிக்கிறது. கல்லூரிக் குழுவின் தலைவராக மாண்புமிகு டாக்டர் ந. சேதுராமன் அவர்களும், செயலாளராக மாண்புமிகு அய்யா திரு. இரா. குருசாமி அவர்களும் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்டு சிறப்புடன் செயல்பட்டுவருகிறது. செந்தமிழ் திங்கள் இதழ் சிறப்பாகத் தமிழ்த் தொண்டாற்றி வருகிறது.
பாண்டித்துரைத் தேவர்கள் உருவச்சிலை
கொடைவள்ளல், சங்கம் கண்ட தமிழ்ச் செம்மல், மாண்புமிகு மன்னர் பாண்டித்துரைத் தேவரின் திரு உருவச் சிலை மீண்டும் அதே இடத்தில் 2007இல் சங்கம் நிறுவியது. சங்கத் தலைவர், துணைத்தலைவர், சங்கச் செயலர், சங்க ஆட்சிக்குழு, பொதுக்குழு, கல்லூரிக் குழு, கல்லூரிப் பேராசிரியப் பெருமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களின் ஆர்வத்தாலும் அயராத உழைப்பாலும் சிலை நிறுவப்பட்டதோடு மட்டுமல்லாமல், மாணவ மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதைகளோடு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர் குழு
நான்காம் தமிழ்ச் சங்கவெளியீடாகிய செந்தமிழ் என்னும் திங்கள் இதழ், 1902 முதல் இன்று வரை மிகச்சிறப்பாக தமிழ்த் தொண்டாற்றி வருகிறது. இவ்விதழை சிறப்புடன் வெளியட ஆசிரியர் குழு ஒன்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. இக்குழுவில் தமிழறிஞர்களும், பெரும்புலவர்களும், பேராசிரியப் பெருமகளும், முனைவர் பெருமக்களும், மொழி ஆய்வாளர்களும், தமிழார்வளர்களும் பங்கேற்று தொண்டாற்றுகிறார்கள். தமிழ் அறிஞர் முனைவர் திரு. தமிழண்ணல், பெரும்புலவர் திரு. இரா இளங்குமரன், நா. பாலுசாமி, ம. ரா. போ. குருமசாமி, அ.அ. மணவாளன், கதிர் மகாதேவன் மற்றும் தமிழார்வளர்கள் ஆலோசகர்களாகவும் அவைப் புலவர்களாகவும் வீற்றிருக்கின்றனர்.
நான்காம் தமிழ்ச்சங்கம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர் அவர்களால் 1901 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கம் நூறு ஆண்டைக் கடந்து எட்டாம் ஆண்டில் நடைபயின்று கொண்டுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பே நடைபெறவேண்டிய நூற்றாண்டு விழா இவ்வாண்டு 2008ல் நடைபெறத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் சங்க ஆட்சிக்கு குழு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு விழா வெற்றிவாகை சூடட்டும். கொடை வள்ளல் பாண்டித்துரைத் தேவரின் புகழ் ஓங்கட்டும். நான்காம் தமிழ்ச் சங்கம் செழித்தோங்கி வளரட்டும். நாற்சங்கம் கண்ட செம்மொழி தமிழே நீ வாழ்க!

Thursday, March 13, 2014

குற்றவாளி அல்ல இவர் சமூக கொடுமையை எதிர்த்து போராடிய போராளி

2008ம் ஆண்டு ஈழ மக்கள் படு கொலை அடங்கிய குறுந்தகடை தமிழ் நாட்டில் உள்ள உறவுகளுக்கு இலவசமாக வழங்கினர். நமது சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அப்போது இருந்த முத்தமிழ் தலைவர் கலைஞர் நமது அலுவலகத்தை காவல்த்துறையை விட்டு தாக்கி நமது ஒருங்கினைப்பாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அந்த வழக்கில் இருந்து இன்று விடுதலை அளித்தது நீதி மன்றம்.நீதி மன்றம் அளித்த தீர்ப்பு இவர் குற்றவாளி அல்ல இவர் சமூக கொடுமையை எதிர்த்து போராடிய போராளி என்று. 


இந்த கட்டுரையின் நோக்கம்,

இந்த கட்டுரையின் நோக்கம் , ராஜீவ் கொலையை பல்வேறு கோணங்களில் அலசுவதும் பல உண்மைகைளை நம்முடன் இருந்து கொண்டே மறைத்த 'உத்தம புத்திரர்களை' வெளியே கொண்டு வருவது தான் நோக்கம். அது மட்டும் அல்லாமல் ,ஹசன் அலி பற்றி ஆராய்வதற்கு முன்பு, இதில் ஈடு பட்டவர்களின் பின்னணியையும் தெரிந்து கொள்வோம்,(எதிரியின் பலத்தை தெரிந்தால் தான் சரியான திசையை நோக்கி நகர முடியும்.)

அதனான் கஷோகி, இவன் தான் ராஜீவ் கொலைக்கு மூளையாக இருந்தது.வெறும் ராஜீவ் கொலைக்கு மட்டும் அல்ல கடந்த 50 வருடங்களில் உலகத்தில் நடந்த அனேக அரசியல் குழப்பங்களுக்கு
பின்னணியில் இருப்பது இந்த அதனான் கஷோகி தான்.

அதனான் கஷோகி யின் தந்தை முஹமது கஷோகி , ஒசாமா பின்லேடன் தந்தை முஹமது பின்லேடன் (இவரது பெயரும் அதுவே) குடும்பத்தின் ஆஸ்தான மருத்துவர், இரு குடும்பத்துக்கும் வியாபார தொடர்புகளும் உண்டு.
ஹாலிவுட் தயாரிப்பாளரும், இளவரசி டயனாவுடன் இறந்த அவரது காதலர் , டோடி அல் பயத் அவர்களின் தாய் மாமா இந்த அதனான் கஷோகி .

உலகத்தில் கள்ள சந்தையில் ஆயுதங்களை விற்பதில் சக்கரவர்த்தியான அதனான் கஷோகி, இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத்க்கு நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவர்.

இஸ்ரேல்க்காக, அரபு நாடுகளுக்குள் ஒற்றுமையை குழைப்பது,தொடர்ந்து அரபு நாடுகளில் எதாவது ஒரு இடத்தில போர் நடந்து கொண்டு இருக்கும்
பின்னணியில் இருப்பது அதனான் கஷோகி,அவருக்கு துணை இருப்பது இஸ்ரேல்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்பில், ஒசாமாக்கு பின்னணியில் மொசாத்க்காக இருந்தது, ஈரான் மற்றும் ஈராக் போரின் பின்னணியில் இருந்ததும் இந்த அதனான் கஷோகி தான்.

இந்த அதனான் கஷோகி தலைமையில் தான் ராஜீவ் கொலை நடந்தேறியது,எங்கையோ ஒரு நாட்டின் முன்னால் பிரதமந்திரியை கொல்ல காரணம் என்ன.இந்த தலைமையின் பின்னணியில் செயல் பட்டது யார் என்பதை தான் நாம் வெளியில் கொண்டு வர வேண்டும்.

இப்படி உலக அரசியலை குழப்பி கொண்டு இருக்கும் மொசாத் தான் இங்கே இருக்கும் ஒரு அரசியல் தலைவரை சந்தித்து உள்ளதாக செய்தி கசிந்து உள்ளது. இது நாட்டுக்கும் நல்லது அல்ல , அந்த அரசியல் தலைவருக்கும் நல்லது அல்ல.

இதையும் நாம் முறியடிக்க வேண்டும் .

இந்த அதனான் கஷோகியின் ராஜா குரு தான்,தீபக் ஜெயின் என்கிற
'சந்திர சாமி'.

இப்படிபட்ட பின்னணி கொண்ட அரசியல் கொலையை , வெறும் சுப்ரமணிய சாமியை மட்டும் சம்பந்தபடுத்தி , தமிழர்களை தமிழ்நாட்டுக்குள்யே சுத்த வைத்த பெருமை இங்கே இருபவர்களையே சாரும்.

ராஜீவ் காந்தியின் கொலையை மறு விசாரணை செய்ய வேண்டும் என்பதே கோரிக்கை.

அடுத்தது - சந்திர சாமி.

திசை திருப்பட்ட ராஜீவ் கொலை வழக்கு !

ராஜீவ் கொலை வழக்கில் தமிழர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படும் இரண்டு பெயர், சுப்ரமணிய சாமி , திருச்சி வேலுசாமி.
திருச்சி வேலுசாமி அவர்களின் வாக்குமுலம் தான் ராஜீவ் கொலை வழக்கில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.ஆனால் தமிழர்களை காப்பாற்ற அந்த வாக்குமுலம் பயன்படவில்லை.

வேலுசாமி அவர்கள் தனது புத்தகத்தில் சம்பவத்தின் அடிப்படையில் தான் குற்றம் சாட்டுகிறார், ஆதாரத்தின் அடிப்படையில் அல்ல.இதனால்
சுப்ரமணிய சாமீ க்கு சம்பந்தம் இல்லை என்ற அர்த்தம் இல்லை,ஆனால் வெறும் சுப்ரமணிய சாமிக்கு மட்டும் தான் சமந்தபட்டு உள்ளாரா.இதனால் தமிழர்கள் வெறும் சுப்ரமணிய சாமியை மட்டும் குற்றம் சொல்லி கொண்டு வழக்கம் போல தமிழ்நாட்டையே சுத்தி சுத்தி
வந்து கொண்டு இருகிறார்கள்.

வேலுசாமி அவர்கள் அவர்களின் புத்தகத்தில், அதனான் கஷோகி, சந்திர சாமி பற்றிய செய்திகள் குறைந்த அளவே உள்ளன.ஆனால் முக்கிய சூத்ரதாரியே இவர்கள் தான்.இதில் இவர் முக்கியமான நபரை பற்றி எழுதவே இல்லை.
அந்த முக்கியமான நபர் , புனா வை சேர்ந்த குதிரை வியாபாரியான 'ஹசன் அலி'.
2009 இறுதி கட்ட போர் நடந்து பின்பும் அவர் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து இருந்து கொண்டே இந்த விசயத்தை வேலுசாமி அவர்கள் பேசி கொண்டு இருப்பது தான் நெருடலாக உள்ளது.
1) ஹசன் அலியை அவர் குறிபிடாமல் விட்டது ஏன் ?
2) ஜெயின் கமிசன் , கடைசி நாள் விசாரணையில் , பிரியாங்கா கலந்து கொண்டார், அப்பொழுது சுப்ரமணிய சாமீ, வேலுசாமி அவர்களின் கேள்விக்கு தடுமாறியபொழுது பிரியங்கா தனது கோப பார்வையால் சுட்டெரித்தார் என்று குறிப்பிட்டு உள்ளார், மேலும் சோனியாவை சந்தித்த பொழுதும் எல்லா விசயங்களையும் சொன்னதாகவும், அதை கேட்டு அதிர்ந்ததாகவும் எழுதி உள்ளார்.
இவ்வளவு சொன்ன பிறகும் , தனது கணவரை கொன்றவன் உடன் சேர்ந்து 1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசாங்கத்தை கவிழ்த்தார்.அப்பொழுது சுப்ரமணிய சாமி கொடுத்த தேநீர் விருந்தில் சோனியாவும் கலந்து கொண்டார்.
3) சாமியுடன் சோனியா கை கோர்த்து அவர் தனது கண்டனத்தை தெரிவிக்க வில்லை, சோனியாவிற்கு இவர் மீது நம்பிக்கை இல்லை என்று அவர் நினைத்து இருந்தால் இன்று வரை காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து இருக்க மாட்டார்.
4) ராஜீவ் காந்தியை என்ற ஒரு உயிரை கொன்றதுக்காக ,சுப்ரமணிய சாமியை பிரிந்த வேலுசாமி அவர்கள், 160000 பேரை கொன்ற சோனியாவின் தலைமையின் கீழ் இன்று அளவும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
5) சமீபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேலு சாமி அவர்கள் ஒரு தொலை காட்சி நிகழ்ச்சியில்,வை கோ அவர்கள் மட்டும் ஈழ விவகாரத்தை வைத்து அரசியல் செய்வதாக சாடி உள்ளார்.
ஆனால், அதே ஈழ பிரச்சனையில் WHOLE SALE வியாபாரியான, இவர் ஆதரிக்கும் இவரது மச்சான் சீமானை ( சீமான் இவரை மாமா என்று தான் அழைக்கிறார் ) பற்றி எதுவும் சொல்லாமல் விட்டது ஏன் ?

திருச்சி வேலுசாமி குறிப்பிட்ட அத்தனை பேரிடமும் , சோனியாவிற்கு நேரடி தொடர்பு உண்டு. இவர்களுக்கு தொடர்பு பாலமாக இருப்பது 'ஹசன் அலி'.

திருச்சி வேலுசாமி ஆரம்பித்தார் , முடிவுரை நாம் எழுதுவோம்.

அடுத்த பகுதியில் ஹசன் அலி பற்றி தொடர்பு உள்ள சம்பவங்களை பற்றி அலசுவோம்.